Saturday, April 26, 2014

SLFA - a farmers movement with difference

Sustainable Livelihood farmers association (SLFA) is functioning in Tamilnadu with the main goal of mobilizing farming community against water privatization and to promote family farming initiative to ensure food security to the rural masses. It happened for the last 8 years of civil society work among farming community. Background for the formation of SLFA: During the year 2007, the interim budget submitted by newly elected DMK led government announced that, Tamilnadu water resource consolidation Project II was going to be implemented with the financial allocation 3600 crores which will mainly replicate the Hanumanadhi model project result to the entire state. The state committee of JASuL decided to make desk study or secondary data review about Tamilnadu water resource consolidation project and Hanumanadhi model project and its impact for better understand of this big loan project. July 2007, JASuL conducted the participatory research study on Impact of Hanumanathi Model Project under Tamilnadu water resource consolidated project (TNWRCP) in Thenkasi region which alienated people from their own water resource by the way of privatizing the common water resource dictate by the World Bank. Now this project is replicated in whole Tamilnadu in the name of Irrigated Agriculture Modernization and Water Bodies Restoration Project (IAMWARM) from year March 2007 to Feb 2013. This project is also funded by World Bank and carried out by the State Government of Tamilnadu as part of structural assessment policy/program (SAP) in restructuring of water sector in Tamilnadu. Hanumanathi model project Impact assessment report was published in both Tamil and English for widely circulated among NGOs and farmers. It was deeply discussed among JASuL set up in various levels. Finally the JASuL General body decided to intervene the IAMWARM project and its implementation site which covering 63 sub basins in Tamilnadu in three different phases. During the initial month of 2008, JASuL was deeply involved in collecting secondary data's about the impact of water sector reforms in Tamilnadu in line with World Bank agenda through various source like meeting PWD officials at various levels for in-depth interviews, sending RTI (right to Information) applications, Journals, and identifying the key civil society actors who are already involved in the same issues. At the same time, identification of farmer’s representative at sub basin level was also initiated by the concerned districts through guidance of state committee. During this year 2008, four regional level training programmes were organized at Madurai, villupuram, Thiruppathur and Perambalur for mobilizing farmer’s leaders under the name of Sustainable livelihood farmers Association (SLFA) mainly to take up the problems connected with IAMWARM. The idea of promoting the formation of SLFA was evolved during the Madurai training programme, hence it was discussed in other regional training programmes and finally decided to evolve SLFA at various levels. End of the four regional level training programmes 4 regional level adhoc committees were formed with representation of Farmers Leaders, Social activist, SHG federation leaders, and retired government officials. The collective of 4 regional adhock committee leaders come together and formed a State Level SLFA Adhoc Committee in Madurai on 26th March 2009. 30 adhoc committee members took part in the meeting and develop a short term action to form the SLFA Movement at state level. The main emphasis of SLFA formation at state level is to create a state level farmers movement to fight against globalization policies which ultimately ruining farming communities in Tamilnadu. In particularly, the short term plan to strengthen the JASuL activity by promoting SLFA movement at various level and to conduct state level conference for raising our demand against the water privatization emphasized by World Bank and its allies in the name structural adjustment loans to state government. From this juncture, the following things were achieved. In-depth field work among farming communities in Tamilnadu which yielded the result of forming Sustainable Livelihood Farmers Sangham (SLFA) at state level was achieved at denobli centre, Pudur, Madurai on 11th and 12th Feb 2010. 96 farmers and NGO activist took part the meeting. This state level consultation elected its state level Executive committee from the participants. Mr.Chelladurai, Mr.Balasundaramoorthi, Ms. Kaveri, Mr.Sivaprakasam, Appavu Balandar, Mr.Jegatheisan, Mr.Aanai Kavundar, Mr.Jeyachandran, Mr.Govindaraj were elected as Executive committee members of SLFA. The Executive committee of SLFA, evolved a 10 point programme or resolution to strengthen the SLFA at grass root level for conceptual clarity among the members. JASUL’S 10 POINT DEMANDS FOR IMMEDIATE ACTION 1. The basic livelihood resources of farmers like land, water, agriculture, livestock and forest should be protected. 2. Encroachments in water resource bodies like lakes, ponds and tanks should be cleared legally and they should be desilted to their maximum capacity. Rainwater harvesting, deepening and desilting works should be done once in two years. 3. To encourage organic/natural farming practices, the subsidy to fertilizing companies should be stopped and the farmers should directly receive the subsidy according to the type of crops under cultivation. The farm products should get fair price which includes production cost and minimum profit and the marketing facilities should be provided at the field itself. 4. Crop insurance scheme should be applicable to all types of crops. Crop Insurance should cover natural calamities and all seasonal changes too. 5. Agricultural labourers should be made eligible for pension and a better scheme than the existing Farmers Protection scheme should be implemented. Children of agricultural workers should be given educational support/loan without any surety demands. 6. To motivate the farmers to plant trees in their lands, there should be a special programme for the farming under the Green India programme in National Action Plan for Climate Change. 7. Like cooperative societies, nationalized banks should also give farm loans without interest to farmers. 8. The NRGEA programme should be extended to farming sector and should be carried out with 50% of the farmers’ participation. 9. Separate budget report should be prepared and submitted for agriculture in India since agriculture is the basic occupation of majority of the people. 10. Non Conventional energy resources should be combined with agriculture practices to ensure self-reliant farming practices. Formation of 16 Basin & 63 Sub basin level SLFA committees in Tamilnadu: There are 34 river basins in the State which have been grouped into 17 major river basins and 127 sub-basins. Out of these 127 sub basins, 63 sub basins were selected to implement IAMWARM (IRRIGATED AGRICULTURE MODERNISATION AND WATER BODIES RESTORATION AND MANAGEMENT) Project from 2007 – 2013 with loan assistance of World Bank by WRO of Tamilnadu government. Formation of Sustainable Livelihood Farmers Sangam (SLFA) in 63 sub basin is a major task for JASuL from 2011 onwards. So far, 60 village level units established and district level committess established in 12 districts of Tamilnadu. These work done under the following way. - Village Level Field Visits - Village Level Farmers Meeting - Sub basin Level or Area Level Farmers Meeting - Basin Level Farmers Farmers meeting

Sunday, September 12, 2010

விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மீட்டர்: அதிர்ச்சியில் விவசாயிகள் - சிவ. மணிகண்டன்

கோவை: விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மீட்டர் பொருத்தும் நடவடிக்கை வரும் காலத்தில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதில் கொண்டு வந்துவிடும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்.

விவசாயிகளுக்குப் புதிதாக மின்மோட்டார்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் எனமுதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் விவசாய பம்ப் செட்டுகள் திறன் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது என்றும், மின்பற்றாக்குறை ஏற்படுவதற்கு இந்த பம்ப் செட்டுகளும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சத மானியத்திலும் மின்மோட்டார்கள் மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, மின்மோட்டார் வழங்கும் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. மின்வாரியம் மூலமாக விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத், உற்பத்தித் திறன் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மோட்டார்களின் தரம் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதில் அளித்த ஆட்சியர், மின்சேமிப்புத் திறன் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மின்மோட்டாருக்கான தொகை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மின்சேமிப்புத் திறனை கண்டறிவதற்காக புதிய மோட்டார்கள் வழங்குவதற்கு முன்பே விவசாய பம்ப் செட்டுகளுக்கு மீட்டர் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இப்போது மின்வாரிய அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள், விவசாய மின் இணைப்பு பெற்ற வருடம், இணைப்பு பெறும்போது பயன்படுத்திய மோட்டாரின் குதிரைத் திறன், தற்போது பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் பம்ப் செட்டுக்கு மீட்டர் பொருத்துவதற்கு சம்மதமா எனக் கேட்கப்பட்டிருக்கிறது.

பழைய மோட்டாருக்கும், புதிதாக வழங்கும் மோட்டாருக்கும் உள்ள மின்சேமிப்புத் திறனை மீட்டர் பொருத்தினால்தான் கணக்கிட முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆனால், மீட்டர் பொருத்திவிட்டால் மின்உபயோகத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம், இல்லாவிட்டால் கட்டணம் எனப் படிப்படியாக இலவச மின்சாரம் இல்லாத நிலைக்குப் போய்விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலர் கந்தசாமி கூறியது: மீட்டர் பொருத்தினால் மட்டுமே மின் உபயோகத்தைக் கணக்கிட முடியும் என்பதல்ல. மின் உபயோகத்தை அளவிட நவீன கருவிகள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில் மோட்டார் ஓடியதை வைத்தே கணக்கிட்டுவிடலாம்.

இப்போது மழை இல்லாத காரணத்தால் பம்ப் செட்டுகளின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. அடுத்த இரு மாதங்களில் பருவமழை வந்துவிடும் என்பதால் பமப் செட்டுகள் பயன்பாடு பெரிய அளவுக்கு இருக்காது. இச்சூழலில் தற்போது மீட்டர் பொருத்தி கணக்கிடுவதும், இன்னும் இரு மாதங்களில் புதிய மோட்டார்கள் வழங்கியதும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் சரியானதாக இருக்காது.

அதோடு, மீட்டர் பொருத்துவதால் வரும் காலங்களில் இலவச மின்சாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் இடையே பரவலாக இருக்கிறது என்றார்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இலவச மோட்டார் வழங்குவதற்காக பெரிய, நடுத்தர, சிறு-குறு விவசாயிகள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்புதான் தற்போது நடைபெற்று வருகிறது.

பாசன நிலம், பயன்படுத்தும் மோட்டாரின் குதிரைத் திறன் ஆகிய விவரங்களை மட்டுமே சேகரித்து வருகிறோம். மற்ற விஷயங்களை அரசுதான் முடிவு செய்யும் என்றனர்.

Monday, July 19, 2010

தனியார் மயமாகிறதா மின்வாரியம்? க. தங்கராஜா

First Published : 19 Jul 2010
சேலம்: தமிழக மின்வாரியத்தில் பல்வேறு நிலைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறையால் வேலைப்பளுவில் தவிக்கும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

÷தமிழகத்தில் 1.41 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்பட 2.12 கோடி மின் இணைப்புகள் உள்ளன. கடந்த 2000-ம் ஆண்டில் 1.20 கோடி மின் இணைப்புகள் இருந்தன. ஆனால் 10 ஆண்டுகளில் மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரட்டிப்பாகி உள்ளது. ஆனால் அதற்கேற்ப மின்வாரிய ஊழியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.÷2002-ம் ஆண்டில் சுமார் 90 ஆயிரம் பேராக இருந்த மின்வாரியப் பணியாளர்களின் எண்ணிக்கை இப்போது 75 ஆயிரமாகக் குறைந்துள்ளது. முதல் வகுப்பு ஊழியர்களான மேல்நிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்களின் எண்ணிக்கை கடந்த 2002-ல் 795 ஆக இருந்தது.

÷இரண்டாம் வகுப்பு ஊழியர்களான உதவிப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் எண்ணிóக்கை 8,171 ஆகவும் இருந்தது. 3-ம் வகுப்பு ஊழியர்களான தொழில்நுட்ப உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாகவும், உதவியாளர்கள் நிலையிலான 4-ம் நிலைப் பணியாளர்கள் சுமார் 53 ஆயிரம் பேர் இருந்தனர்.

÷தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 2,547 மின்வாரிய பொறியாளர்கள், ஊழியர்கள் இருக்க வேண்டிய நிலையில், இப்போது 1,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேட்டூரில் 1,728 ஊழியர்கள் பணியிடம் இருக்கும் நிலையில் 1,267 பேர் மட்டுமே இப்போது பணியில் உள்ளனர். எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 1,600 பணியிடங்களில் 779 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். வட சென்னையில் 1,974 இடங்கள் உள்ள நிலையில் 1,029 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

÷கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓய்வு பெறும் பொறியாளர்கள், ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இப்போது பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்களுக்கு பணிச்சுமை மிகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே மின்சாரப் பற்றாக்குறை உள்ள நிலையில், மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் எதுவும் பயனுக்கு வராமல், தொடர்ந்து காலதாமதமாகிக் கொண்டே செல்கிறது.

÷மின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக மேட்டூர், எண்ணூர், வடசென்னை பகுதிகளில் ரூ. 10 ஆயிரம் கோடிக்கு புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மேற்பார்வை செய்வதற்காக, தரப் பரிசோதனை செய்வதற்காக, தனியாக ஆட்களை நியமிக்கவில்லை. சரியான மேற்பார்வை இல்லாததே மின் திட்டங்கள் பயனுக்கு வருவதை தாமதப்படுத்தும் முக்கிய காரணியாக இருப்பதாக அதிகாரிகள் குறை கூறுகின்றனர்.

÷நிலைமை இப்படி இருக்க, மேலும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளது மின்வாரிய நிர்வாகம். தலைமைப் பொறியாளர் முதல் உதவியாளர் வரையிலான சில பதவியிடங்களை சரண்டர் செய்யுமாறும் பணியாளர்களை 60 ஆயிரமாகக் குறைப்பதே இலக்கு என்றும், கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு மின்வாரியத் தலைமை உத்தரவிட்டுள்ளதாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிóக்கின்றன.

÷இதேபோல் சில பணிகளை அவுட்சோர்சிங் விடவும் மின்வாரியம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. வடசென்னையில் நிலக்கரியை ரயில்களில் ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்பும் பணியை தனியாரிடம் ஒப்படைத்த மின்வாரியம் இப்போது வரை பிரச்னையையே சந்தித்து வருகிறது. வரும் காலங்களில் பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அரசு ஊழியர் அல்லாதவர்களை நியமித்து பணிகளைச் செய்யத் திட்டமிட்டு இருப்பதாக, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, July 12, 2010

ரூ.3,000 கோடி கடன் வாங்கிய கருணாநிதி!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=33676

உலக வங்கியில் கடன் வாங்கி குவித்தார் முதல்வர் ! சென்னை: தமிழக அபிவிருத்தி திட்டத்திற்காக உலக வங்கியிடம் சுமார் 3 ஆயிம் கோடிகளை மேலும் கடன் வாங்கினார் தமிழக முதல்வர் கருணாநிதி. ஏற்கனவே பல கோடிக்கணக்கில் நடந்த அபிவிருத்தி பணிகள் தவிர்த்து கூடுதலாக சுகாதாரம் மற்றும் சாலைப்பணிகள் மேம்பாட்டுக்கு இந்த நிதி வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் திட்டம்: தமிழகத்தில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்த, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் முதற்கட்டப் பணிகள் 2010 மார்ச்சுத் திங்களுடன் முடிவடைந்தன. இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தை மேலும் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்திட வேண்டுமென முதவர் கருணாநிதி மத்திய அரசு மூலம் உலக வங்கியைக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உலக வங்கி, 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 2013 செப்டம்பர் வரை மூன்றாண்டுகளுக்கு இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தைச் செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பயனாக, 564 கோடியே 94 இலட்ச ரூபாய் உலகவங்கி நிதியுதவியுடன் தமிழக அரசு ஏற்கும் 62 கோடியே 78 லட்ச ரூபாயும் சேர்ந்து மொத்தம் 627 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், கருப்பைவாய்ப் புற்று நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், மார்பகப் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைத் திட்டம், இதய நோய்த் தடுப்புத் திட்டம், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைத்திட்டத்திற்குக் கூடுதல் ஆம்புலன்ஸ் ஊர்திகள், அமரர் ஊர்தி சேவைத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்: அதேபோல, 1,670 கோடி ரூபாய் உலகவங்கி உதவியுடன் 490 கோடி ரூபாய் தமிழக அரசின் பங்கும் சேர்ந்து மொத்தம் 2 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை இணைக்கும் 13 புறவழிச்சாலைகளை உள்ளடக்கிய 725 கிலோ மீட்டர் நீளச்சாலைகளை மேம்படுத்துதல்; 1,033 கிலோ மீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளைச் சீரமைத்தல்; நெடுஞ்சாலைத்துறையின் நிறுவன அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி உதவி வழங்கி, 2012ஆம் ஆண்டு வரை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை உலக வங்கி ஏற்றுக்கொண்டு 232 கோடியே 67 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின: அதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 49 கோடி ரூபாய் கூடுதல் நிதி வழங்குகிறது. இதன் காரணமாக, 1,903 கோடி ரூபாய் உலக வங்கி நிதியும், 539 கோடி ரூபாய் தமிழக அரசின் நிதியும் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய் திருத்திய திட்ட மதிப்பீட்டில் 31.3.2012 வரை இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்றுநடைபெற்ற இந்த இரண்டு ஒப்பந்தங்களுள், தமிழ்நாடு சுகாதாரத்திட்டம் குறித்த ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச்செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கு. சுப்புராஜ், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோர் கையொப்பம் இட்டனர்.

சாலை மேம்பாட்டுத்திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மத்திய அரசின் சார்பாக அதன் நிதித்துறை இணைச் செயலாளர் அனூப் பூஜாரி, தமிழக அரசின் சார்பாக நெடுஞ்சாலைத் துறைத் துறைச் செயலாளர் சந்தானம், உலக வங்கியின் சார்பில் அதன் முதுநிலை பொது சுகாதார வல்லுநர் பிரீத்தி குடேசியா ஆகியோரும் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியின் போது, அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்கு நருமாகிய முனைவர் விஜயகுமார், நிதித்துறை சிறப்புச் செயலாளரும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநருமாகிய தியாகராஜன், மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு, மக்கள் நலனிற்கு உண்மையாக எத்தனை கோடிகள் சென்றடையும்? இதெல்லாம் சரிதான், ஆனால் இத்தனை கோடிகளில் எத்தனை மக்களின் நலனிற்க்காகச் செல்லப்போகிறது, எத்தனை கோடிகளை கழகக் கண்மணிகள் அமுக்கப் போகின்றன என்பதனையும் சொல்லிவிட்டால் நன்றாக இருக்கும். இத்தனை கோடிகள் கடனாகப் பெற்றால், யார் செல்லுத்தப் போவது? கோடிகளில் கமிஷன் பெற்று பயனாளிகளாக வாழ்க்கையை அனுபவிக்கப்போவது, ஆர்டர்கள் பெறும் கழகக் கண்மணிகள்தாம்! பிறகு மக்களுக்கு என்னக் கிடைக்கப் போகிறது?

Thursday, June 24, 2010

உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் முதலிடத்தில் இந்தியா

வியாழக்கிழமை, ஜூன் 24, 2010, 12:38[IST]

டெல்லி: உலக வங்கியிடம் கடன் வாங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக வங்கியிடம் நாம் இதுவரை வாங்கியுள்ள கடன் தொகை 900 கோடி டாலர் (அதாவது ரூ. 41,500 கோடி) ஆகும். இத்தொகை கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட தொகையைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.

உலக வங்கி கடந்த ஆண்டு 220 கோடி டாலர் கடனுதவி அளித்தது.

2010ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும் உலக வங்கியின் நிதியாண்டில், அதனிடம் அதிக அளவில் கடன் வாங்கிய ஒரே நாடு இந்தியாதான்.

கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் அளவு 2.2 பில்லியன் டாலர்கள் மட்டும்தான். ஆனால் அதன் பின்னர் இந்தியா இந்த அளவுக்கு கடனை வாங்கிக் குவித்து வைத்து விட்டது.

உலக வங்கியிடம் கடன் வாங்கியதில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாகும். அடுத்த இடம் மெக்சிகோவுக்கு. அதன் அளவு 11 சதவீதமாகும். 3வது இடத்தில் உள்ள தென் ஆப்பிரிக்காவின் கடன் அளவு 7 சதவீதமாகும்.

ஜூன் 20ம் தேதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள கடன் தொகையின் அளவு 9.26 பில்லியன் டாலர். வருகிற நிதியாண்டில் மேலும் 0.04 பில்லியன் டாலர் கடனை இந்தியாவுக்குத் தரவுள்ளது உலக வங்கி.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டம், கோசி ஆறு சீரமைப்பு திட்டம் போன்ற பல திட்டங்களுக்கு உலக வங்கி கடன் வழங்குகிறது. மேலும், பிரத்தியேக சரக்கு போக்குவரத்து ரயில் பாதை திட்டத்துக்கும் கடனுதவி அளிக்க உள்ளது உலக வங்கி.

Monday, April 19, 2010

நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டு செயல்பாடு அமைப்பின் உடனடி செயல்திட்டத்திற்கான 10அம்ச கோரிக்கைகள்

1.விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதாரமான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடுகள் பாதுகாக்கப்படவெண்டும்.

2.ஏரி, குளங்கள், கண்மாய்கள் போன்ற பொது நீராதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி அகற்றப்பட்டு அதனுடைய முழுமையான கொள்ளளவு அடிப்படையில் தூர்வாரப்படவேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஏரி, குளம் தூர்வாறுதல் போன்ற பணிகளை கட்டாயம் இரண்டான்டுகளுக்கு ஒருமுறை செய்யவேண்டும்.

3.இயற்கை விவசாயத்தை வலுப்படுத்தும் விதமாக இதுவரை கம்பெனிகளுக்கு உரமானியம் என்ற பெயரில் கொடுக்கப்படும் மனியங்கள் நிறுத்தப்பட்டு, பயிர்களின் வகைக்கேற்ற ஒவ்வொரு ஏக்கருக்கும் இவ்வளவு என நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யவேண்டும்.
உற்பத்தி செலவு, லாபத்தை உள்ளடக்கிய வருடம் முழுவதற்குமான சீரான ஞாயமான ( Fair Price) விலை நிர்ணய முறை உற்பத்தி செய்யும் இடங்களிலேயே விற்பனை செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்படவேண்டும்.

4.இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எல்லா பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கான காப்பீட்டு திட்டத்தை வருடம் முழுவது செயல்படுத்த வேண்டும்.

5.விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்குமான உழவர் பாதுகாப்பு திட்டத்தை விட ஒருபடி மேலான திட்டத்தை முறையாக செயல்படுத்தி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியம் கொடுக்கவேண்டும். மேலும் இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் எந்தவித நிபந்தனைகளும் இன்றி கல்விகடன் கொடுக்கவேண்டும்.

6.விவசாயிகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாய் தங்களுடைய நிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் மரங்களை நட ஊக்குவிக்கும் விதமாய் தேசிய காலநிலை மாற்ற தடுப்பு திட்டத்தில் (கிரீன் இண்டியா) விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்

7.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு 3% வட்டியில் விவசாய கடன் கொடுக்கவேண்டும்.

8.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை விவசாயப்பணிகளுக்கு விரிவுபடுத்தி, 50% விவசாயிகளின் பங்கேற்புடன் செயல்படுத்தவேண்டும்.

9. கிராமப்புற மக்களின் அடிப்படை தொழில், நாட்டின் உணவு உற்பத்தி, பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழில் என்ற அடிப்படையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

10.மரபுசாரா எரிசக்தியை விவசாயத்துடன் இணைத்து தற்சார்பு விவசாயத்திற்கு வித்திடவேண்டும்.

SLFA மாநில பிரதிநிதிகள் கலந்தாலோசனை கூட்டம்

தேதி:பிப்ரவரி, 11, 12 (வியாழன், வெள்ளி), 2010
இடம்:டீநோபிளி பாஸ்டோரல் சென்டர், கே.புதூர், மதுரை


கலந்தாய்விற்கான பின்னணி:
நிலைத்த வாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு (Joint Action for Sustainable Livelihood – JASuL) – ஜாசூல் அமைப்பு கடந்த இரண்டாண்டு காலமாக நாமது கிராமப்புற வாழ்வாதாரங்களான நிலம், நீர், விவசாயம், கால்நடை, காடு வளர்ப்பு போன்ற கிராமப்புறமக்களின் அடிப்படை கட்டுமானங்களை பாதுகாப்பது, நிலைத்த தன்மையுடன் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் (IAMWARM) என்ற பெயரில் பாசன நீரை தனியார் மயமாக்கும் உலகவங்கியின் முன்முயற்சிகள் குறித்தும், வெளியிடு பொருட்கள் குறைவான அல்லது செலவு குறைச்சலான விவசாயம் குறித்தும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழகத்தின் பலபகுதிகளில் உள்ள சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மத்தியில் பயிற்சிகள், கருத்தரங்கள், விவசாயிகளுடனான நேரடி சந்திப்புகள் வாயிலாக விவசாயிகள் மத்தியில் பிரச்சாரபணிகளை முன்னெடுத்து வருகிறது.

அத்துடன் இன்றைய உலகமயம், தாரளமயம், தனியார்மயச்சூழலில் விவசாய அமைப்புகளின் பங்கு, போட்டி நிறைந்த, சந்தைக்கான உற்பத்தி என்ற மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு, இன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு சாதகமான கொள்கைகள் குறித்தான சிந்தனையை விவசாயிகள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக உலகவங்கியின் பாசன தண்ணீரை தனியார்மயமாக்கும் முயற்சியினை அம்பலப்படுத்தும் விதமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.

31துணைவடிநிலப்பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மண்டல விவசாயிகள் - சமூக செயல்பாட்டளர்களுக்கான தமிழ்நாடு நீர்நிலவள திட்டம் (IAMWARM) குறித்த கலந்தாய்வு கூட்டம் 2008 மே மாதம் 16, 17 தேதிகளில் மதுரை பீல் பண்ணை, சாக்கிளிபட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலகமய கண்ணோட்டத்தில் விவசாயிகளின் பிரச்சனை அணுக கூடிய, கிராமப்புற வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கும் ஆக்கபூர்வமான பணியில் ஈடுபடக்கூடிய ஓர் விவசாய அமைப்பினை உருவாக்கவேண்டியதன் தேவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கம் ( Sustainable Livelihood Faramers Association - SLFA ) என்ற அமைப்பை ஏற்படுத்து என்ற கோரிக்கை தென்மாவட்ட விவசாயிகளால் முன்மொழியப்பட்டு பின்னர் வடக்கு மண்டல விவசாயிகளுக்கான விழுப்புரம், திருப்பத்தூர் கூட்டம், மத்திய மண்டல விவசாயிகளுக்கான பெரம்பலூர் கூட்டங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்தந்த மண்டலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதல் SLFA அட்காக் கமிட்டி கூட்டம் 2009 மார்ச் 26ம் தேதி ஜாசூல் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் SLFA அமைப்பை மாநில அளவில் உருவாக்குவது என இறுதியாக முடிவெடுக்கப்பட்டது. இச்சங்கம் மாநில அளவில் விவசாய விளைபொருட்களின் விலை நிர்ணய கோரிக்கையையும் உள்ளடக்கிய, விவசாய பிரச்சனைகளைகளின் உலகப்பின்னணியை உள்ளூர் கண்ணோட்டத்துடன் அணுக கூடிய ஒரு மாறுபட்ட விவசாயிகளின் அமைப்பாக செயல்படவேண்டும் என எல்லோராலும் இக்கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து கிராம அளவில், துணைவடிநிலப்பகுதி அளவில், மாவட்ட அளவில் என பல்வேறு விவசாயிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தமிழகத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் செயல்படுத்தப்படுகின்ற 19 மாவட்டங்களில் உள்ள விவசாய செயல்பாட்டாளர்கள் மத்தியில் தொடர் செயல்பாட்டிற்கான ஒத்த சிந்தனையாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்டவர்கள் மத்தியில் செயல்பாட்டு ரீதியான உறவுகளை ஜாசூல் அமைப்பு கடந்த ஒருவருட காலமாக பேணி வந்துள்ளது.

இவ்வுறவுகளையும், ஒத்த சிந்தனைகளையும் அமைப்புரீதியாக கொண்டுவரும் முகமாக மாநில அளவிலான விவசாயிகள் கலந்தாலோசனை கூட்டம் கடந்த பிப்ரவரி 11, 12 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு ஏற்கெனவே மாவட்ட அளவில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விவசாய தலைவர்களில் இருந்து இருவர் வீதம் அழைக்கப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்டம் நடைபெறாத மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு ஒரு விவசாயியும் அழைக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து பணிசெய்யும் ஒரு சமூக செயல்பாட்டளரும் என மொத்தம் 105 பேர் அழைக்கப்பட்டனர். 105பேரில் 70 பேர் கலந்து கொண்ட இரண்டு நாள் கூட்டம் மேற்சொன்ன தேதிகளில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் விபரம் பின்வருமாறு.

முதல் நாள் அமர்வு (11/02/2010):
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திருமதி. சாந்தி அவர்களின் வரவேற்புறைக்கு பின் கலந்தாய்வு கூட்டம் சரியாக 10.30 மணிக்கு துவங்கியது. அதனை தொடர்ந்து கலந்தாய்விற்கான பின்னணி குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜன் விளக்கினார்.

அதன்பின்னர் இந்தியா விவாசாய நெருக்கடி என்ற தலைப்பில் கருத்துரை நடைபெற்றது. மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் இக்கருத்துரைக்கு தலைமை தாங்கினார். விவசாய நெருக்கடி குறித்து திருச்சி மண்டல அமைப்பாளர் திரு.சிவப்பிரகாசமும், விதை மற்றும் உணவு நெருக்கடி குறித்து நிலைத்த விவசாய செயல்பாட்டாளர் திருச்சி ராஜாராம் உரையாற்றினார். அவரை தொடர்ந்து நிலம் அன்னியமாதல் என்ற தலைப்பில் திரு. சி.ப. வேணு, சேலம் மண்டல அமைப்பாளரும், கம்பெனி விவசாயம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் தனராஜ் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு கருத்துரையாளர்கள் விளக்கமளித்தனர். டாக்டர். மாரிமுத்து, சென்டெக்ட் கிருஷி விக்கியான் கேந்திரா அவர்களின் நிறைவுறைக்கு பின் முதல் அமர்வு நிறைவு பெற்றது.

மதிய உணவுக்கு பிந்தைய நீர் நெருக்கடி என்ற இரண்டாம் அமர்விற்கு இயற்கை விவசாயி மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான திரு. ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். முதலில் தமிழகத்தின் நீர்வள ஆதாரங்கள் என்ற தலைப்பில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திரு. ராஜீ உரையாற்றினார். அவரை தொடர்ந்து பாரம்பரிய நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. நாதன் உரையாற்றினார். அடுத்ததாக பருவநிலை மாற்றமும் அதனால் ஏற்பட்டுள்ள நீர், விவசாய நெருக்கடிகளும் என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்கத்தின் அமைப்பாளரும், குடுமக்கள் உலக அரங்கு - தமிழ்நாடு அமைப்பினை சேர்ந்த திரு. பாமயன் என்ற பாலசுப்பிரமணி அவர்கள் உரையாற்றினார். இறுதியாக நீர்வள மேம்பாட்டிற்கான பெருந்திட்டங்களும் அதன் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் மானாமதுரை ஒன்றிய கவுன்ஸ்லர் மற்றும் பொறியாளருமான திரு. பாலசுப்பிரமணி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிராஜனும் இணைந்து உரையாற்றினர்.

ஒரு மணி நேர இடைவேளைக்கு பின்பு விவசாயிகளின் கருத்துப்பகிர்விற்கான அமர்வு திரு. எம். எஸ், ஜெயராஜ், ராமநாதபுரம் மண்டல அமைப்பாளரின் தலைமையில் கூடியது. இவ்வமர்வில் விவசாயிகள் தங்களுடைய விவசாய அனுபவங்கள், குடும்ப பின்னணி, இன்றைய கருத்துரை நிகழ்வுகள் குறித்து தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு உணவுக்கு பின் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேராழிகள் குறித்தான ருத்திரம் 2015 என்ற திரைப்படம் திரையிடப்பட்டது.

இரண்டாம் நாள் அமர்வு (12/02/2010):

பங்கேற்பாளர்களின் வேண்டுகோளுக்கினங்க, பாசன விவசாயிகள் சங்கம், அமைப்பு, செயல்படும் முறைகள் குறித்து அடவிநயனார் அணைக்கட்டு நீர் பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் கொடிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவரும் பொறியாளருமான திரு. செல்லத்துரை அவர்கள் விளக்கமளித்தார். பங்கேற்பாளர்களின் நேரடி கேள்விகளுக்கு பொறியாளர் பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து உதாரணங்களுடன் விளக்கினார். இவ்வமர்வினை மாநில ஒருங்கினைப்பாளர் மாரிராஜன் ஒருங்கிணைத்தார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி நிரல்படி அமர்வுகள் துவங்கின. முதலாவதாக ஏன் இந்த SLFA விவசாய சங்க முயற்சி என்ற தலைப்பிலான அமர்விற்கு சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ஜான்சன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ஒய். டேவிட் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரையில், நமது விவசாய வரலாற்றை உற்றுநோக்கினால் விவசாயம் என்றுமே விவசாயிகளின் கையிலேயே இருந்தது என்ற வரலாற்று உண்மை புரியும் என்றார். விவசாயம் சம்பந்தப்பட்ட முடிவுகள், குறிப்பாக விதைகள், இடுபொருட்கள் சம்பந்தமான முடிவுகள் விவசாயிகளாலேயே எடுக்கப்பட்டது. மன்னர்கள் குளங்களை வெட்டி விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் ஒத்தாசை புரிந்துள்ளனர். நீர்பகிர்மானங்கள் குடிமராமத்து என்ற முறையில் உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்பட்டது. எக்காலத்திலும் நீர் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட விசயங்கள் மையப்படுத்தப்பட்டதில்லை. அவை பரவலாக்கப்பட்டே இருந்துள்ளன. அதனால் தான் நம்மால் இன்று வறட்சி மாவட்டங்கள் என அழைக்கப்படும் மாவட்டங்களில் கூட எக்டேருக்கு 16 டன் வரை மகசூல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சாதனையை இன்றைய பல்கலை கழகங்கள், பசுமை புரட்சிகள், இரண்டாம் பசுமை புரட்சிகளால் எட்டிக்கூட பார்க்க முடியாது. நிலம், விவசாயத்தின் மீதான இந்த வன்முறையான புரட்சிகள் ஏற்படுத்திய விளைவு நம்முடைய நிலங்களின் வளமிளப்பு மற்றும் மலட்டுதன்மைதான். நமது பாரம்பரியம் என்றுமே நிலைத்த தன்மையுடையதாய், சூழலுக்குகந்ததாய் எல்லோரலும் உற்பத்தியில் ஈடுபடக்கூடியதாய் மட்டுமே உற்பத்திமுறை இருந்து வந்துள்ளது.

நிலைத்த தன்மையுடைய நம்முடைய பாரம்பரியமுறை ஆங்கிலேயர் காலத்தில் வரிவசூலூக்க வேண்டி மையப்படுத்தப்பட்டதன் விளைவே பஞ்சம், உணவு பற்றாக்குறை, அரிசி இறக்குமதி என்று நாடு சின்னாபின்னப்படுத்தப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்ற ஆரம்ப வருடங்கள் நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமான வேலைகள் செய்யப்பட்டன. அதன் விளைவுதான் ஜமீன்தார் ஒழிப்பு சட்டம், நில உச்சவரம்பு சட்டம், குறைந்த பட்ச கூலி சட்டம், சிறு, குறு விவசாயிகள் மேம்பாட்டுக்கான வட்டார வளர்ச்சி திட்டங்கள் போன்றவைகளாகும். ஆனால் காலப்போக்கில் அரசின் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறிப்பாக இந்திரா காந்தி காலத்தில் வெளிநாட்டு கடன் வாங்க தொடங்கிய பின் சுயசார்பு கொள்கைகளில் இருந்து முற்றிலுமாக வெளியேற தொடங்கினோம். 1990களில் முற்றிலும் சுயசார்பை கைவிட்டு சந்தைப்பொருளாதாரத்தை பின்பற்ற துவங்கி 25 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 25வருடங்களில் விவசாயிகள் மத்தியில் சந்தைப்பொருளாதாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் கணக்கில் அடங்கா.

எல்லாவற்றிற்கு முத்தாய்ப்பாய் ஒன்றறை லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசின் குற்ற ஆணையம் (Crime Bureo) தன்னுடைய வருடாந்தர அறிக்கையில் கூறியுள்ளது. மேலும் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாங்கும் திறன் அற்றுப்போய் உள்ளனர். ஆனால் ஆளும் தரப்பினர் நாடு வளருகிறது. 8% வளர்ச்சியை அடைந்துவிட்டோம். இதை இரட்டை இலக்கமாய் மாற்றினால் வல்லரசாகிவிடலாம் என முழங்குகின்றனர். இங்கு எது வளர்ச்சி என்ற கேள்விக்கு விடை தேவைப்படுகிறது. வளர்ச்சி குறிப்பிட்ட சதவிதத்தினரை மட்டும் சார்ந்த்தா அல்லது எல்லோருக்குமான என்ற கேள்விகள் எழும்புகின்றன. இவ்வளர்ச்சியின் இலக்கணம் பொருள் உற்பத்தியை சார்ந்ததா அல்லது சேவைத்துறையை சார்ந்ததா, என்ன மாதிரியான பொருளுற்பத்தி, சேவை என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்படாத வரை இன்றைய விவசாய பிரச்சனைகள் மற்றும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட முடியாது.

இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை தேட வேன்டிய வரலாற்று தேவையை தமிழகத்தில் நிறைவு செய்யவேண்டிய பணி இங்கு கூடியுள்ள விவசாயிகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் உண்டு. அதற்கான ஒரு விவசாய இயக்கமாக இந்த நிலைத்த வாழ்வாதத்திற்கான விவசாயிகள் சங்கம் திகழ வேண்டும். இவ்வமைப்பு விவசாயிகளின் விளைபொருளுக்கான விலைநிர்ணய பிரச்சனைகளுடன் அதற்கான உலக பின்னணியை கேள்விக்குள்ளாக்கு இயக்கமாக உருவெடுக்கவேண்டும்.

இதனை செயல்வடிவம் கொடுக்கும் விதமாக உலகவங்கி கடனின் கீழ் செயல்படுத்தப்படும் நீர்வள நிலவள திட்டத்தை, உலகவங்கியை, மாநில, மத்திய அரசுகளின் தவறான கொள்கைகளை கேள்வி கேட்கும் வகையில் மாநாடுகளை நடத்தி நமது கோரிக்கைகளின் வாயிலாய் அரசுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவை உள்ளது. அதையும் கூட உடனடியாக இந்த ஆண்டே செய்யும் பட்சத்தில் உலகவங்கி திட்டத்தில் மாற்றங்களை செய்யும் வாய்ப்பு உண்டு என்ற வகையில் இதை சரியான தருணம் என்று உணருகிறேன் என்றார்.

இதனை தொடர்ந்து தேனீர் இடைவேளைக்கு பின் குழுவிவாதம் தொடங்கியது. குழு விவாதத்தை கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு. அப்பாவு பாலாண்டார் வழிநடத்தினார். நீர் மற்றும் உணவு நெருக்கடிக்கான தீர்வுகள், அமைப்பு ரீதியான செயல்பாட்டு நெறிமுறைகள், கூட்டு செயல்பாடு என்ற தலைபுகளின் கீழ் தெற்கு, மத்திய, வட மண்டல என குழுக்களாய் தனித்தனியே பிரிந்து விவாதித்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

குழு விவாத அறிக்கைகளிலிருந்து நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்க மாநில கலந்தாலோசனை குழு கூட்டத்தின் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- மக்களின் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தெளிவான நீர்க்கொள்கை தேவை. மக்களிடம் விரிவாக விவாதிக்கப்பட்டு இக்கொள்கை உருவாக்கப்படவேண்டும். உலகவங்கி, பன்னாட்டு கம்பெனிகள் போன்ற வல்லாதிக்க நிறுவனங்களின் ஈடுபாடு, கொள்கை உருவாக்கும் பின்னணியில் இருக்கக்கூடாது.

- ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஆற்றுப்பாசனம் போன்ற பொதுநீராதாரங்கள் முக்கியத்துவம் பெறவேண்டும். அவை சரியான முறையில் பராமரிக்கப்படவும், பாதுகாக்கப்படவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும் பொது நீர்நிலைகள் மீதான ஆக்கிரமிப்புகள் தமிழ்நாடு குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டப்படி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டும்.

- பொது நீராதாரங்களின் மேலாண்மை அந்தந்த ஆயக்கட்டுதாரர் சங்கங்களிடம் ஒப்படைக்கவேண்டும். பொதுப்பணித்துறையின் தேவையற்ற தலையீடு இன்றி இவ்வமைப்புகளை பலப்படுத்தி குடிமராமத்து முறைகளை மறுஉருவாக்கம் செய்ய பொதுப்பணித்துறை பக்கபலமாக இருக்கவேண்டும்.

- நீராதார அமைப்புகளில் உள்ள வேலிக்கருவேல், மற்றும் சமூகக்காடுகள் திட்ட மரவகைகள் அகற்றப்படவேண்டும். இனிமேல் புதிதாக இவ்வகையான மரங்களை நடக்கூடாது.

- ஆறுகளில் அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதை தடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளை மறுசுழற்சி செய்து விட வேண்டும்.

- பாசான தண்ணீரை வர்த்தகமயமாக்கும் போக்கு உடனே தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

- வேளாண்மைக்கான நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களின் மீதான உரிமை விவசாயிகளிடமே இருக்கவேண்டும்.. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்பூங்காக்கள் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கைமாற்றிவிடுவது உணவு உற்பத்தியை பாதிக்கும் என்ற அடிப்படையில் வேளாண் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு நிலங்களை கையகப்படுத்துவதை தடுக்க கோருகிறோம்.

- விவசாயம் நீடித்ததாகவும், நிலைத்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு இசைந்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் இன்று பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் கைகளில் கம்பெனி விவசாயம் அல்லது கார்ப்பரேட் விவசாயம் என்ற பெயரில் விவசாயம் திணிக்கப்படும் போக்கு மாற்றப்பட்டு உள்ளூர் விவசாயிகளுக்கு சாதகமானதாய் மாற்றப்பட தேவையான கொள்கைரீதியான ஆதாரவு வேண்டும்.

- அனைத்து விதமான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சாணக்கொல்லிகளையும் தடைசெய்யவேண்டும். விவசாயிகள் அனைவரும் உரம், பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனிகளின் கையில் சிக்கிவிடாமல் தடுத்து இயற்கை முறையிலான விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த வேண்டும். இதன்மூலம் மண்வளம், நீர்நிலைகளை பாதுகாக்கப்படும், உற்பத்தி அதிகரிக்கும்.

- அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலையை நிர்ணயித்து ஆண்டு முழுவதும் கொள்முதல் நிலையங்களை திறந்து செயல்படுத்த வேண்டும்.

- விதைகள் மற்றும் செயற்கையாக மரபணுக்களை மாற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை உடனே தடைசெய்யவேன்டும். இதன் மூலம் விதைகளின் உரிமை பன்னாட்டு கம்பெனிகளுக்கு மாறுவதை தடைசெய்து பாரம்பரிய விதைகளை பாதுகாக்க கோருகிறோம். மத்திய மாநில அரசுகள் நமது விவசாயத்தில் பன்னாட்டு கம்பெனிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடுவதை தடுத்து பாரம்பரிய விவசாயத்தின் பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும்.

- விதைகள் மீது விவசாயிகள் கொண்டுள்ள பாரம்பரிய உரிமைகள் பன்னாட்டு நிறுவனங்களிடம் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் களவு போகின்றது அடிப்படையில் நமது விவசாய பல்கலை கழகங்கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மரபணு மாற்ற விதை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

- விவசாயக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் விவசாயிகளுக்கு தேவை. ஆனால் அவற்றின் இன்றைய பன்னாட்டு கம்பெனிகளை சார்ந்திருக்கும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லாத கம்பெனிகளுக்கு சாதகமான ஆய்வுகளில் ஈடுபடும் போக்கு தடுத்து நிறுத்தப்படவேண்டும். விவசாயிகளோடு இணைந்து கற்றுக்கொள்ளவும் ஆய்வு செய்யவும் அதைப்பகிர்ந்து கொள்ளவும் ஏற்ற மனப்பான்மை விவசாய கல்லூரிகளுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் வரவேண்டும். இல்லையெனில் இன்றைய விவசாயிகள் விரோத விவசாய கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் வேண்டவே வேண்டாம்.

- வெளிநாட்டு கடன்கள் வாங்குவது போன்ற மிகமுக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அது சம்பந்தமாக நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் கிராம சபைகளில் விவாதிக்கப்பட வேண்டும்

- நாட்டின் ஒரு சிறிய சதவித மக்களின் நலன்களுக்காக பெருவாரியான மக்களின் நலன்களை புறக்கணிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகளில் இருந்து விடுபட்டு நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுயசார்பு, கிராம தன்னிறைவு கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்த முன்வர வேண்டும்.

குழு விவாதத்திற்கு பின், தொடர்செயல்பாடுகளை வழிநடத்துவதற்கென்று நிலைத்த வாழ்வாதாரத்திற்கான விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு உருவாக்கப்பட்டது. மாநில செயற்குழுவிற்கு மண்டலத்திற்கு மூவர் வீதம் (2 விவசாய தலைவர்கள் + 1 சமூக செயல்பாட்டாளர்) 9பேர் தேர்வு செய்யப்பட்டனர். செல்லத்துரை, ராமநாதபுரம் பாலசுப்பிரமணியம், காவேரி, அப்பாவு பாலான்டார், ஆணைக்கவுண்டர், சிவப்பிரகாஷம், ஜெயச்சந்திரன், ஜெகதீஷன், கோவிந்தராஜ் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாவர். இவர்களை தவிர தேவையின் அடிப்படையில் நியமன உறுப்பினர்களை தேர்வு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக இம்மாநில செயற்குழு கூடி மாநில கலந்தாலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை செயல்வடிவம் கொடுப்பது, சங்கத்தை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக வட மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகேசன் நன்றியுறைக்கு பின் கூட்டம் 3 மணிக்கு நிறைவு பெற்றது.
ஆக்கம்:
மாரிராஜன்.தி, மாநில ஒருங்கிணைப்பாளர்,
நிலைத்தவாழ்வாதாரத்திற்கான கூட்டுசெயல்பாடு